Posts

*எனக்குப் புரிந்தது இதுவே ! (38)*

Image
உணர்வுகள் என்பது ஆன்மாவின் ஒளி என்று பார்த்தோம் . மனிதன் சத்துவம் ,ரஜஸ்,தமஸ் என்னும் முன்று குணங்களின் வடிவானவன் இதில் சத்துவம் என்பது ஞான சேர்க்கை , ரஜஸ்என்பது கர்மாவின் சேர்க்கை , தமஸ்என்பது மயக்கத்தில் ஆழ்த்தும் மாயை இந்த முன்று குணங்களில்மனிதர்கள் இருக்கும் நிலைக்கு தகுந்த படி அப்போது இருக்கும் உணர்வு நல்லதாகவோ தீயதாகவோ மாறுகிறது . குணம் என்பது இருக்கும் தன்மை ,சுழ்நிலை ,உண்ணும் உணவு ,விரதம் முதலியவை பொருத்ததாகும் ஆயினும் என்றும் சத்துவ நிலையில் இருப்பது ஆன்மீக வாழ்வின் அவசியத தேவை நமது தனிப்பட்ட வாழ்வு ,பிரபஞ்ச வாழ்வின் ஒரு பகுதியாகும் . நாம் வாழும் வாழ்வு அமைதியையும் பாதுகாப்பையும் பெறவேண்டுமானால் நமது வாழ்வு நம்மை சுற்றி இருக்கும் உலக வாழ்வுடன் ,பிரபஞ்ச வாழ்வுடன் இயைந்து இருக்கவேண்டும் . தியானம் என்பது உணர்வை குவிப்பது, உடம்பினுள் உணர்வினை வளர்ப்பது அது மனதை சரிவர கையாளுவது . ஆனால் தனிப்பட்ட வாழ்வு பிரபஞ்ச வாழ்வில் இருந்து வேறுபடுமானால் இது கடினம் ஆகிவிடும் . மனதின் ஆற்றல் ,உடல் ஆரோகியம் இவை அனைத்திற்கும் தேவையான ஆற்றல் பிரபஞ்ச வாழ்விலும் பிரபஞ்ச மனத்திலும் அடங்கயுள்ளன .பிரபஞ்ச ...

*எனக்கு புரிந்தது இதுவே ! (37)-*

Image
வேதத்தில் இருந்து கூறப்படும் 'தத்துவமசி' போன்ற மகா வாக்கியங்கள் போல் புதுவை அன்னையின் மகா வாக்கியம் ஒன்று உள்ளது .அவர்கள் கூறிய அருளுரையில் இருந்து இந்த வாக்கியத்தை மகாவாக்கியமாக நான் மதிக்கிறேன் அது ' அகவுணர்வுகளின் வெளிப்பாடே நம்மை சுற்றிய புறச்செயல்கள் ' என்பதுவே .ஆகும் . இதுவே நம்மைச்சுற்றி நடக்கும் அனைத்து காரணங்களுக்கும் தகுந்த ஒரு சரியான காரணத்தை கூறவல்லது ஆகும் உண்மையில் எல்லோரும் சொல்வது போல் நாம் என்ன நினைக்கிறோமோ அதைப்பொருத்தோ ,நமது எண்ணங்களை பொறுத்தோ ,நமது தேவைகளின் பொறுத்தோ , நமது பிரார்த்தனைகளைப் பொறுத்தோமட்டும் நமக்கு நடக்கும் காரியங்கள் இருப்பதில்லை .நமது அறிவுக்கும் நடக்கும் காரியங்களுக்கும் தொடர்பில்லை . ஆனால் நமது அக உணர்வின் தன்மையைப் பொறுத்தே காரியங்கள் நடைபெறுகின்றன .உணர்வு என்பது அறிவல்ல ! வேண்டுமானால் அறிவின் விளைவு நிகழ்வைக்கூறலாம் . எப்படி சந்தோஷமாக எப்ப்போதும் இருப்பது என தெரிந்திருந்தாலும் .,அந்த தெரிந்தது மட்டும் சந்தோசம் ஆகிவிடுமா ? . சந்தோஷமாக உணரவேண்டும் . அந்த உணர்வு எங்கிருந்து வருகிறது . எது உணர்கிறது . மூளையா ? மனதா ? மனம் தான் உணரவேண...

*எனக்கு புரிந்தது இதுவே ! (36)*

Image
*பொதுவாக ஆன்மீக பாதையில் பலரிடத்தும் ஒரு பெரிய மூட நம்பிக்கை உண்டு* ஒரு குறிப்பிட்ட நபர் ஆன்மீக பாதையில் போகிறார் என்றதும் மற்றவர் அந்தசாதகரைப் பற்றி என்ன புரிந்து கொள்கிறார்கள் , என்ன அவரிடம் எதிர்ப்பார்க்கிறார்கள் என்றால் , அந்த ஆன்மீக பாதையில் செல்ல முயலும் சாதகர் மற்றவர் போல் இருக்கமாட்டார் , எப்போதம் வித்தியாசமாகவே இருப்பார் , சாதரணமாக அனைவரைப் போலவும் சாப்பிடமாட்டார் , ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்திருப்பார் அவர் எப்போதும் மிகவும் கடு கடுப்பாகவே இருப்பார் , அவரிடம் நகைச்சுவை உணர்வு இராது , அன்பு என்பது இல்லாது வறட்டு ஆசாமியாக இருப்பார் முக்கியமாக ஏதாவது குடிசையில் மிக ஏழ்மையாக தரித்திர நிலையில் வசிப்பார் , மேலும் அவர் நாகரீகமாக இருக்கக்கூடாது தாடி மீசையுடன் தான் இருக்கவேண்டும் .சாதரண மனிதர் போல் இருப்பது ஆன்மீக பாதையில் செல்வதற்கு தகுதியில்லை என்பது தான் பெரும்பாலோரது .முடிவு .. மேலும் தனது உடமைகளை பிறருக்கு தானம் செய்து விட்டு தனக்கு என்று ஒன்றும் இல்லாமல் இருப்பார் இதுவே ஆன்மீக வாதி என்றதும் அநேகருக்கு வரும் கற்ப்பனை சித்திரம் . அவரிடம் பிறருக்கு உதவி செய்யவோ அல்லது தனது ஆன்ம...

*எனக்குப புரிந்தது இதுவே ! (35)*

Image
உண்மையான தியானம் என்று கூறும்போதே அது என்ன உண்மையான தியானம் ? அப்போ பொய்யான தியானம் என்று ஒன்று உண்டா ? எனும் கேள்வி எழத்தான் செய்யும் .. ஆமாம் அப்படிதான் இருக்கும்போலிருக்கிறது .. உண்மையில் தியானம் என்பது என்ன ? நாம் அறிந்து கொள்ளவேண்டிய பொருளைப பற்றிய உண்மையை நோக்கி தொடர்ந்து செல்லும் பயணம் தான் தியானம் ஆகும் . தொடர்ந்து செல்வது என்றால் எப்படி என நமது சமய நூல்கள் தெளிவாக கூறுகின்றன தொடர்ந்து என்பது பின்பற்றுவதுஎன்பது மட்டும் அல்ல ,அது ஒரு இடைவிடாத தொடரல் . . ஒரு பாத்திரத்தில் இருந்து மற்றொரு பாத்திரத்திற்கு எண்ணையை மாற்றும் பொது அது துண்டு துண்டாக விழாது . அது ஒரு கம்பியை போல் தொடர்ந்து விழுவது தான் சீராக விழுவது என்பது ஆகும் .. ஒழுக்கம் எனும் பெயர் ஒழுகல் எனும் வேரில் இருந்துதான் வந்ததது . இடைவிடாது கொள்கையைக் கடைபிடிப்பது ஒழுக்கம் . அதேப் போல் தியானம் செய்ய்பவர்களிடம் இருந்து தியானம் செய்யப்படும் பொருள் எனும் பாத்திரத்திற்கு தியானம் செய்பவரது எண்ணம் சீராக ஒரு கம்பி போல் தொடர்ந்து பாய்கிறது .! தியானம் சீராக நடைபெரும் போது , எண்ணுபவர், எண்ணப்படும் பொருள் , எண்ணுவது, இந்த மூன்றும் ஒரே...

*எனக்கு புரிந்தது இதுவே ! (34)-*

Image
*சென்ற பதிவில் காலம் ,இடம் இவைகளைப்பற்றிப்பார்த்தோம் .* நான் கூறியவை உங்களுக்கு எந்த அளவிற்கு பயனாக இருந்தது என்று எனக்கு சரிவர புலப்படவில்லை .இன்னும் கொஞ்சம் அவைகளைப்பற்றி மீண்டும் பேசுவோம் . பரிணாம வளர்ச்சியை சற்று கவனமாக ஆழ்த்துப பார்த்தோமானால் இயற்கையுடன் நடக்கும் போராட்டம் தான் அதன் மாற்றத்திற்கு காரணமாக அமைந்து இருக்கிறது என்பதுபுலப்படும் . எப்போதும் எல்லா உயிர்களும் தம்மை மேம்படுத்திக்கொள்ள சதா முயன்றுவருகின்றன . இயற்கையுடன் சதா ஒரு போராட்டம் நிகழ்ந்துதான் வருகிறது . எல்லா உயிர்களும் தம்மை மாற்றிக்கொள்வதன் மூலமே இயற்கையை எப்படியாவது வெல்லுகின்றன .! அதேப்போல் ஒவ்வருவரும் தன்னை மாற்றிக்கொள்வதன் மூலமே சூழ்நிலையால் வரும் தீமையை வெல்லமுடியும் .! சூழ்நிலை என்பது நமதிஷ்ட்டதால் வருவதில்லை .. சூழ்நிலைகளை அப்படியே ஒப்புக்கொண்டு நாம் சும்மாஇருந்திடவும் இயலாது எல்லா உயிரினமும் மாற்றத்திற்கு முயலும் போது நாமும் ஒருபடி மேலேப் போக முயலவேன்டாமா ?அப்படியானால் நமது சூழ்நிலைகளை நாம் எப்படி வெற்றிகொள்வது ? வாட்டும் வறுமையையில் இருந்து எப்ப்டி வெளிவருவது ? தொடரும் துன்ப சூழ்நிலையை எவ்வாறு மாற்றுவது ...

*எனக்கு புரிந்தது இதுவே ! (33)*

Image
உலகமே உங்களுக்குச் சொந்தமாக வேண்டுமானாலும் அது கைகூடும் காலம் கருதி இடத்தார் செய்யின் என்கிறார் வள்ளுவர். இந்தக் காலம் இடம் பற்றி முன்பே இரண்டுமுறை இத்தொடரில் பேசப்பட்டுள்ளது . இதுவே கதை அல்லது நாவல் என்றால் சம்பவங்களின் தொடர்பு வைத்து ஒரு நேர் கோட்டில் கொண்டு செல்லலாம் . ஆனால் இதுவோ மனிதனின் மனதைப் பற்றிய தொடர் எனவே எண்ணத்தின் ஓட்டம் போல் சற்று மாறி மாறி முன் பின் போகவேண்டிஇருக்கிறது, .பொறுத்தருள்க .. எந்த ஒரு காரியம் நடைபெற வேண்டும் என்றாலும் காலமும் ,இடமும் இயைந்து இணைந்து வரவேண்டி இருக்கிறது.அப்போதுதான் அந்தக்காரியம் நடைபெறும் . . அவை இரண்டும் சற்று ஒருமைபடாமல் ,சிறிய வேறுபாடு இருந்தாலும் நூலிழையில் எண்ணும் காரியம் நழுவிப்போகிறது . சென்னை செல்ல ரயில் பிடிக்கவேண்டும் என்றால் , ரயில் வரும் ரயில்வே நிலையத்திற்கு முதலில் போகவேண்டி இருக்கிறது . போவது மட்டுமல்ல ரயில் வரும் சரியான நேரத்தில் இருக்கவேண்டி இருக்கிறது . அப்போதுதான் நாம் எண்ணியபடி நாம் போகவேண்டிய ரயிலை பிடிக்கமுடிகிறது . போவது அவசியமா ? போவதினால் பலன் விளையுமா ? என்பதெல்லாம் ஒரு தனி பிரிவு , தனிஆய்வு . எண்ணியதை செய்ய இடமும் க...

*எனக்கு புரிந்தது இதுவே ! (32)*

Image
*செல்வந்தனாகவும் ,சுகமாக வாழ்வதும் நமது உரிமை*, ஒவ்வருவரின் வாழும் வழி அதுதான் . ஏழ்மையுடனும் வறுமையுடனும் வாழச்சொல்லி இறைவன் எங்கும் கூறவில்லை . வாழ்க்கை ஆனந்த மயமாக இருக்கவேண்டும் ஏன் எனில் ஆண்டவனும் ஆனந்த மயம் தான் ஆண்டவன் படைத்த இவ்வுலகின் உயரிய படைப்பான மனிதனும் ஆனந்த மயமாகத்தானே இருக்கவேண்டும் . தகப்பனைப் போல்தானே பிள்ளையும் இருக்கவேண்டும் . நாம் இறைவனின் படைப்பு , நாம் ஆனந்த மயமாகவே இருக்கவேண்டும் அதுவே இறைப் பண்பு . நாம் அடுத்தவரை ஆனந்தப்பட வைத்தால் இறைவனின் பணியை சற்று குறைத்தவர் ஆவோம் அவர்வேலையை நாம் பார்த்தால் நம் நலனை இறைவன்நிச்சயம் பார்த்துக்கொள்வார் நாம அடுத்தவரை ஆனந்தப் படுத்தினால் நம்மை யாராவது ஆனந்தப் படுத்துவார்கள் . ஆனால் நாம் எப்போதும் ஆனந்தமாக இருக்கிறோமா ? என்ன status இல இருந்தாலும் நாம் என்ன state இல இருக்கிறோம் என்பது தானே முக்கியம் ! நாம் தான் பிறந்ததில் இருந்து இருப்பது ஒரே நிலை தானே ! மேலும் மேலும் வேண்டும் என்பது தானே நமது நிலை "இன்னும் கொஞ்சம்" இன்னும் கொஞ்சம் என்பதுதானே நமது இதயகீதம் .. கிடைக்ககிடைக்க மேலும் ஒன்று தேவையாக இருக்கிறதேத் தவிர கிடைத்...